மூன்று மாதங்கள் தள்ளிப் போகிறதா கேப்டன் மில்லர்?

புதன், 26 அக்டோபர் 2022 (15:23 IST)
தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார். 

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தென்காசியில் தொடங்க உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சென்னையில் நடந்துள்ளது. அதில் தனுஷ், பிரியங்கா மோகன் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோருடன் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதையடுத்து தென்காசியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இதுவரை எடுத்தக் காட்சிகளை போட்டு பார்த்த மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளாராம். விரைவில் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளா அருகே செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட இருந்தது. ஆனால் அங்கே இப்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் இன்னும் 3 மாத காலத்துக்கு ஷூட் தொடங்கப்பட வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளதாம். அதனால் மூன்று மாதம் கழித்து அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்