சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போண்டா மணி!

செவ்வாய், 18 அக்டோபர் 2022 (15:51 IST)
போண்டா மணி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான போண்டா மணி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கபட்டுள்ளார். இதற்காக அவர் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உதவி செய்ய வேண்டும் என சக நடிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் போண்டா மணியை நேரில் சந்தித்து அவருடைய சிகிச்சை செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்கும் என்று தெரிவித்தார்.  மேலும் நடிகர் சங்கம் சார்பாக நடிகர் மனோபாலாவும் சென்று அவருக்கு நிதியுதவி அளித்து நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில் இப்போது சிகிச்சை முடிந்து போண்டா மணி வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்