பாலிவுட்டை விட்டு விலக முடிவெடுத்த பிரபலம் –டிவிட்டர் பதிவால் சர்ச்சை!

புதன், 22 ஜூலை 2020 (11:51 IST)
பாலிவுட்டில் சிறந்த படங்களை எடுத்து வரும் இயக்குனர் அனுபவ் சின்ஹா தான் பாலிவுட் படங்களை இனி இயக்கப்போவதில்லை என மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

முல்க் படத்தின் மூலம் பாலிவுட் படங்களுக்கு அறிமுகமானவர் அனுபவ் சின்ஹா. அதன் பின்னர் அவர் இயக்கிய ஆர்ட்டிகிள் 15 படம் இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்தது. நாடு முழுவதும் பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்தது. இந்த ஆண்டு தாப்ஸி நடிப்பில் அவர் உருவாக்கிய தப்பாட் படமும் விவாதங்களை எழுப்பியது.

இந்நிலையில் தனது டிவிட்டரில் அனுபவ் சின்ஹா என்ற பெயருக்கு பக்கத்தில் அடைப்புக்குள் பாலிவுட் இல்லை என புதிதாக சேர்த்திருப்பது பரபரப்பை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் அவர் பாலிவுட் படங்களை இனி இயக்க போவதில்லை என்ற கருத்தும் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்