ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இந்திய குறும்படம்!

வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (10:51 IST)
ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட பிட்டூ என்ற குறும்படம் இடம்பெற்றுள்ளது.

சர்வதேசப் படங்களுக்கு என தனிப்பட்ட விருதும் ஆஸ்கார் விழாவில் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில் இவ்விருதுக்காக சும்ர் 93 நாடுகள் கலந்துகொண்டன. இதில், அடுத்த சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன. நார்வே, ருமானியா, ரஷ்யா உள்ளிட்ட 15 நாடுகளின் படங்கள் இவ்விருதிற்குப் போட்டியிடவுள்ளன. மார்ச் 5 முதல் 9 ஆம் தேதி வரை நடக்கவுள்ள வாக்குப் பதிவில் இந்நாடுகள் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிட்டூ என்ற குறும்படம் இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது. கரிஷ்மா தேவ் துபே இயக்கியுள்ள இந்த குறும்படத்தை ஏக்தா கபூர், குணீத் மோங்கா மற்றும் தஹிரா காஷ்யப் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்