ஆஸ்கர் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம்!

புதன், 25 நவம்பர் 2020 (17:45 IST)
மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ஜல்லிக்கட்டு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்படும் ஒரு  திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவில் ஆஸ்கரில் கலந்துகொள்ளும். கடந்த காலங்களில் நாயகன், இந்தியன், ஜீன்ஸ் மற்றும் விசாரணை ஆகிய படங்கள் தமிழகத்தில் இருந்து அந்த பிரிவில் சென்றுள்ளனர். ஆனால் இந்தியாவில் இருந்து சென்ற படங்களிலேயே லகான் மட்டுமே இறுதி சுற்று வரை சென்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு 91 ஆவது அகாடமி விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து மலையாளப் படமான ஜல்லிக்கட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை லிஜோ ஜோஸ் பள்ளிச்சேரி இயக்கி இருந்தார். அவர் இயக்கிய அங்கமாலி டைரிஸ் மற்றும் ஈ மா ஊ ஆகிய படங்கள் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்