அப்ப பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ இல்லையா? திடீர் திருப்பம்!

புதன், 12 ஜனவரி 2022 (18:06 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் ராஜு, பிரியங்கா, பாவனி, நிரூப் மற்றும் அமீர் ஆகிய ஐந்து போட்டியாளர்களில் ஒருவர் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்படுவார் என்பது தெரிந்ததே.
 
நேற்றைய நிலவரப்படி போட்டியாளர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் வாக்குகள் பெற்று ராஜூ முன்னிலையில் இருப்பதாகவும்,  பிரியங்கா இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் பாவனியும், நான்காவது இடத்தில் நிரூப்பும் 5வது இடத்தில் அமீர் இருப்பதாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் திடீரென பாவனிக்கு வாக்குகள் அதிகரித்து வருவதாகவும் அவர் பிரியங்காவை ஓவர்டேக் செய்து விட்டு ரன்னர் அப் போட்டியாளராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அதுமட்டுமின்றி அவர் ராஜூவையும் நெருங்கி விடுவார் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்