இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியவர்கள் - கத்தி கூச்சலிட்ட பிரியங்கா!

திங்கள், 11 அக்டோபர் 2021 (14:59 IST)
பிக்பாஸ் 5 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் நகைச்சுவை குறைவில்லாமல் இருப்பதால் ஆடியன்ஸ் பெரும்பாலானோர் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இமான் அண்ணாச்சி மற்றும் பிரியங்காவின் காமெடி TRP'யை எகிறவைத்துள்ளது.
 
இதற்கிடையில் நமீதா மாரிமுத்து சக போட்டியாளரான தாமரையுடன் சண்டையிட்டு வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் தூக்கி எரிந்ததால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக செய்திகள் கூறுகிறது.
 
நமீதா வெளியேறியதை தொடர்ந்து அடுத்ததாக யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என கேள்வி தற்போது எழுந்துள்ளது. இன்றைய முதல் ப்ரோமோவில் எவிக்ஷன் ப்ரொஸுக்கான நாமினேஷன் துவங்கியது. இரண்டாவது ப்ரோமவில் அவர்களின் பெயர்கள் வெளியானது. அதன்படி,  நாதியா, நிரூவ் , இசைவாணி , இமான் , பிரியங்கா, அபிநய் , அபிஷேக், அக்ஷரா உள்ளிட்டோர் நாமினேஷனில் சிக்கியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்