ஆரி குடும்பத்த காமிங்கடா.... வெறித்தனமான வெயிட்டிங்கில் ஆடியன்ஸ்!

வியாழன், 31 டிசம்பர் 2020 (14:36 IST)
பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களை பார்க்க அவர்களது குடும்ப உறவினர்கள் வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கின்றனர். அந்தவகையில் ஷிவானியின் அம்மா , பாலாஜியின் நண்பர் உள்ளிட்டவர்களை தொடர்ந்து இன்று கேபியின் அம்மா வந்துள்ளார். 
 
அவர் வீட்டிற்குள் நுழைந்ததும் கேபியை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினார் . அதையடுத்து ஆரியிடம் சென்று உங்களை நெடுஞ்சாலை படத்தின் போதே சந்தித்திருக்கிறேன் எனக்கூறி அவரிடம் பேசினார். பின்னர்  கேபியின் தவறுகளை சுட்டிக்காட்டினார்.
 
அதையடுத்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஆஜீத்தின் குடும்பத்தார் அவரை சந்திக்க வந்துள்ளனர். அஜீத்தை பற்றி நாம் எல்லோரும் நினைக்கும் அதே கருத்தை தான் அவரது தாயும் முன் வைக்கிறார். அதாவது, யாரிடமும் பேசாமல் இருப்பது. பின்னர் வீட்டில் உள்ள சக ஹவுஸ்சமேட்ஸ்களுடன் அமர்ந்து பேசினார்கள். இருந்தாலும் எல்லோரும் ஆரியின் மனைவி அவரது குழந்தையுடன் வந்து அன்பை வெளிப்படுத்துவதை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்