மம்தா பானர்ஜி முதல்வராக நீடிப்பாரா? இன்று வாக்கு எண்ணிக்கை!

ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (09:00 IST)
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் போட்டியிட்ட பவானிபுர் என்ற தொகுதியில் இடைத்தேர்தல் முடிவு இன்று வெளியாக உள்ளதை அடுத்து அவர் தொடர்ந்து முதல்வராக நீடிப்பாரா அல்லது ராஜினாமா செய்வாரா என்பது இன்றைய தேர்தல் முடிவில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த மே மாதம் நடந்த மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார் என்பதும் அவரது கட்சி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 இதனை அடுத்து சமீபத்தில் நடைபெற்ற பவானிபுர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் திப்ரேவால் என்பவர் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய இடைத் தேர்தல் முடிவைப் பொறுத்து தான் மம்தாவின் அரசியல் எதிர்காலம் உள்ளது என்பதும் இன்று அவர் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வராக நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்