கபடி வீரராக நடிக்கும் அதர்வா… ராஜ்கிரண் மற்றும் சற்குனத்தோடு இணையும் கூட்டணி!

வியாழன், 11 மார்ச் 2021 (17:59 IST)
அதர்வா மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் உருவாகும் படத்தை சற்குணம் இயக்க உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார் அதர்வா. இருந்தாலும் தனக்கு அடையாளம் சொல்வது போல பரதேசிக்குப் பின் ஒரு படம் அமையவில்லையே என்ற ஏக்கத்தில் உள்ளாராம். இப்போது அவர் நடிப்பில் குருதி ஆட்டம் படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் களவாணி பட புகழ் சற்குணம் இயக்கும் புதிய படமான பொத்தேரி படத்தில் கபடி வீரராக அவர் நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். பீரியட் படமான இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்