கன்னட வாய்ப்பை உதறிய அருண் விஜய்

வியாழன், 30 ஏப்ரல் 2015 (15:06 IST)
இதுதான் தமிழ் சினிமாவின் சாபக்கேடு. ஒரு நடிகர் வில்லனாக நடித்து பெயர் வாங்கினால் சாகிறவரை அவரை வில்லனாக மட்டுமே நடிக்க வைப்பார்கள். அல்லது, வில்லனாக நடிக்க வைத்தே சாகடிப்பார்கள்.
 
என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த பிறகு வில்லன் கதாபாத்திரங்கள்தான் அருண் விஜய்யை தேடி வருகின்றன. தமிழிலிருந்து மட்டுமில்லை, கன்னடத்திலிருந்தும்.
 
சரவணன் தனது, இவன் வேற மாதிரி படத்தை கன்னடத்தில் புனித் ராஜ்குமாரை வைத்து ரீமேக் செய்கிறார். இதில் வில்லனாக நடிக்க அருண் விஜய்யை கேட்டிருக்கிறார்கள். ஹீரோவாக நடித்த, வா நாளை வெளியாகிறது. அடுத்து கௌதம் ஹீரோவாக வைத்து படம் செய்வதாக சொல்லியிருக்கிறார். இந்த நேரத்தில் வில்லனா என்று கன்னட வாய்ப்பை உதறியிருக்கிறார் அருண் விஜய்.
 
எதிர்பார்த்ததுதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்