நண்பருக்கு கதை சொல்லியுள்ள அருண் ராஜா காமராஜா… சிவகார்த்திகேயனின் சம்மதம் கிடைக்குமா?

திங்கள், 14 பிப்ரவரி 2022 (15:12 IST)
இயக்குனர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமைக் கொண்டவர் அருண் ராஜா காமராஜா.

நடிகர் சிவகார்த்திகேயனின் கல்லூரி கால நண்பரான அருண் ராஜா காமராஜா சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். மேலும் நடிகராகவும் சிவகார்த்திகேயன் பல படங்களில் அவரை நடிக்க வைத்துள்ளார்.

கனா படத்துக்கு பிறகு வெற்றி இயக்குனராகியுள்ளதாக அவர் இப்போது நெஞ்சுக்கு நீதி படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு பிறகு கார்த்திக்கு ஒரு கதை சொல்லியுள்ளார். ஆனால் அந்த படம் தொடங்க நாளாகும் என்பதால் அதற்குள் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை சொல்லியுள்ளாராம். ஆனால் சிவகார்த்திகேயனும் பல படங்களில் பிஸியாக இருப்பதால் இப்போது தேதி கிடைக்குமா என்று தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்