டிமாண்டி காலனிக்காக 19 -ஆம் நூற்றாண்டு அரங்குகள்

திங்கள், 2 மார்ச் 2015 (15:52 IST)
அருள்நிதி நடிப்பில் உருவாகிவரும் படம், டிமாண்டி காலனி. பேய் படமான இது, 19 -ஆம் நூற்றாண்டில் ஆழ்வார்பேட்டை டிமாண்டி காலனியில் நடந்த சில நிகழ்வுகளை பின்னணியாக வைத்து தயாராகியுள்ளது.
 
இந்தப் படத்துக்காக லஸ் கார்னர், பட்டினப்பாக்கம், ஆழ்வார்பேட்டை ஆகிய பகுதிகள் 19 -ஆம் நூற்றாண்டில் எப்படி இருந்தனவோ அச்சு அசலாக அப்படியே அரங்குகளாக உருவாக்கி அதில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
 
ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளியும், அருள்நிதியின் மேனகா மூவிஸும் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. முருகதாஸின் முன்னாள் உதவி இயக்குனர் அஜய்ஞானமுத்து படத்தை இயக்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்