தமிழ், ஹிந்திக்கு தனித்தனியாக கச்சேரி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்

சனி, 16 செப்டம்பர் 2017 (15:36 IST)
தமிழ் மற்றும் ஹிந்திப் பாடல்களுக்கு தனித்தனியாக கச்சேரி செய்யப் போவதாக அறிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.


 

 
கடந்த ஜூலை மாதம் லண்டனில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி நடைபெற்றது.அதில், ஹிந்திப் பாடல்களைவிட தமிழ்ப் பாடல்களே அதிகம் பாடப்பட்டதாகக் கூறி, ஹிந்தி ரசிகர்கள் பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினர். சிலர், டிக்கெட் பணத்தைத் திருப்பிக் கேட்டனர். இதனால், அடுத்த மாதம் டொரண்டோவில் இரண்டு நாள் கச்சேரியை நடத்துக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஒருநாள் தமிழ்ப் பாடல்களும், இன்னொரு நாள் ஹிந்திப் பாடல்களும் பாடும் வகையில், இரண்டு நாட்களுக்கு கச்சேரி திட்டமிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்