ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்கள் – அதிரடி முடிவெடுத்த முன்னணி நடிகை!

புதன், 9 டிசம்பர் 2020 (15:26 IST)
நடிகை அனுஷ்கா அடுத்த ஆண்டு தமிழில் இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதேபோல பிரபாஸுடன் இவர் நடித்த வரலாற்று சிறப்பு மிக்கதிரைப்படமான பாகுபலி திரைப்படம் இருக்கு பெரும் புகழும் பெற்று தந்தது. கூடவே உலகம் முழுக்க உள்ள ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்திக்கொண்டார். 

ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்துக்கு பின்னர் அவர் அதிகமான படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதிலும் தமிழ் படங்களில் அவர் தலைகாட்டவே இல்லை. இந்நிலையில் இப்போது தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ள அனுஷ்கா அடுத்த ஆண்டு இரண்டு தமிழ்ப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். அதில் ஒரு படம் கௌதம் மேனன் இயக்கும் படமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்