சுந்தர் சி க்கு வில்லன் ஆகிறாரா பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்? வெளியான தகவல்!

புதன், 11 மே 2022 (10:12 IST)
இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர்.

இதற்கு முன்பு அவர் முருகதாஸ் இயக்கிய பாலிவுட் படத்தில் சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு வில்லனாக நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் நயன்தாரா, அதர்வா ஆகியோர் நடிப்பில் உருவான இமைக்கா நொடிகள் படத்திலும் வில்லனாக தோன்றியிருந்தார்.

இந்நிலையில் இப்போது இயக்குனர் திரு இயக்கத்தில் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தை திரிஷா நடித்த பரமபத விளையாட்டு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் திருஞானம் இயக்கி வருகிறார்.  இந்த படத்துக்கு ’ஒன் டு ஒன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்துவரும் நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்