புதருக்குள் போட்டோ ஷூட்... ஒத்த சிரிப்பில் மொத்த ரசிகர்களையும் ஈர்த்த அனுபமா!

வியாழன், 25 ஜூன் 2020 (09:49 IST)
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட அரபித்து வந்தார். ஆனால், திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமுக வலைதளங்களில் ஆக்ட்டீவாக செயல்பட்டு தொடர்சியான பதிவுகள் , டப்மாஸ் என ரசிகர்களுடன் நெருக்கமாக உரையாடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது காடு போன்ற அடர்ந்த மரங்கள் அடங்கிய பகுதியில் போட்டோ ஷூட் நடத்திய போடோக்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவரது  அழகிய சுருட்டை முடியில் Hat போட்டுகொண்டு கியூட் ஸ்மைலுடன் போஸ் கொடுத்த அழகான போட்டோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

Cheese pic.twitter.com/HYRzc4JzeS

— Anupama Parameswaran (@anupamahere) June 23, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்