நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை! கடுப்பான ரசிகர்கள்!

சனி, 13 பிப்ரவரி 2021 (08:39 IST)
நடிகை அனுபமா பரமேஸ்வரன் நிச்சயதார்த்த புகைப்படம் என ஒன்றை வெளியிட்டு ரசிகர்களைக் கடுப்பாக்கியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். மலையாளம் அல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகின்றனர். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்போது பிஸியாக நடித்து வருகிறார்.

அங்கு ஒரு நடிகரை அவர் காதலித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது அவர் ஒரு சிறு குழந்தையின் கையைப் பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நிச்சயதார்த்தம் ஆகியது எனக் குறிப்பிட்டு அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி அவரை திட்டும் விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்