மொட்ட மாடியில் நின்று ரொமான்ஸ் செய்த அஞ்சனா... ஷாக்கான கணவர்!

புதன், 3 ஜூன் 2020 (07:43 IST)
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் அஞ்சனாவும் அவரது கணவர் சந்திரனும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வீட்டின் மொட்ட மடியில் போட்டோ எடுக்கும் கேப்பில் கணவருடன் ரொமான்ஸ் செய்த போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு  "காதல் எப்போதும் உங்களை சுற்றி உள்ளது. அது கண்ணுக்கு தெரியவில்லை என்றாலும் நீங்கள் உணர வேண்டும். அது உங்களை கடவுள் போல பாதுகாக்கிறது" என்ற அழகான கேப்ஷன் கொடுத்திருந்தார்.


அதற்கு கமெண்ட் செய்த அஞ்சனாவின் கணவர் சந்திரன், என்னையா கடவுள்னு சொல்ற..? என வியந்து கேட்க அதற்கு பதிலளித்த அஞ்சனா,  "நீ தான் என் அன்பு. அன்பே கடவுள்.. அதனால் உன்னை தான் சொன்னேன் " என்று பதில் கொடுத்துள்ளார். லாக்டவுன் நேரத்தில் இந்த காதல் ஜோடியின் ரொமான்ஸ் பெருக்கெடுத்து ஓடுவதை கண்டு அவரது ரசிகர்கள் இப்படியே சந்தோஷமா இருங்க என்று வாழ்த்திவிட்டு போகிறார்கள்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Love is always around !

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்