கண்களை கட்டிக்கொண்டு நடனமாடிய அனிதா - கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சனி, 4 செப்டம்பர் 2021 (14:54 IST)
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அனிதா. தற்போது இவர் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் தனது கண் தான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்பதும் இதில் அனிதா மற்றும் ஷாருக் ஜோடி மிக அபாரமாக நடனமாடி நடுவர்களையும் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த வாரத்தில் ’மீண்டும் பள்ளிக்கு போகலாம்’ என்ற சுற்றில் அனிதா மற்றும் ஷாருக் ஆகிய இருவரும் பார்வையற்றவர்கள் ஆக நடித்து நடனமாடினர். அவர்களது நடனத்தை மிகப்பெரிய பாராட்டுதல் நடுவர்கள் மூலம் கிடைத்தாலும் நெட்டிசன்ஸ் இதெல்லாம் ஒரு டான்ஸா? பெரிய சாதனை பண்ணிட்டாங்களோ? என அனிதாவை மட்டுமல்லாமல் விஜய் டிவியையும் சேர்த்து கழுவி ஊற்றி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்