தற்போது தமிழில் ரஜினிகாந்தின் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் அவர் கைவசம் உள்ளன. படங்களுக்கு இசையமைப்பது போலவே தொடர்ந்து பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். 34 வயதாகும் அனிருத் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் பேச்சிலராக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதிமாறனின் மகள் காவ்யா மாறனை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை அனிருத் மறுத்துள்ளார்.