பஹத் பாசிலுக்கு முன்னர் பிருத்விராஜ் படத்தை இயக்கும் அல்போன்ஸ் புத்திரன்!

வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (15:47 IST)
’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவ்வளவு பெரிய வெற்றி பெற்ற திரைப்படத்துக்கு பிறகு  5 ஆண்டுகளாக அவர் அடுத்த படத்தை பற்றி அறிவிக்கவில்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பஹத் பாசிலை வைத்து பாட்டு என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். மேலும் அந்த படத்துக்கு தானே இசையமைப்பதாகவும் அறிவித்தார். இந்நிலையில் இந்த படத்தில் இப்போது நயன்தாரா நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியுள்ளது.

ஆனால் இப்போது நயன்தாரா மற்றும் பஹத் பாசிலின் தேதிகளை பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதால் அந்த படத்தை தள்ளிவைத்து விட்டு, புதிதாக ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தில் பிருத்விராஜ் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்க உள்ளது. பாட்டு படத்தில் நடிக்க நயன்தாரா மற்றும் பஹத் பாசில் ஆகியோரின் தேதிகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதால் இந்த படத்தை முதலில் இயக்க உள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்