தாய்லாந்து ஷூட்டிங்கில் அஜித் கலந்துகொள்வது எப்போது? வெளியான தகவல்!

செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (16:00 IST)
அஜித் 61 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தாய்லாந்தில் நடக்க உள்ளது.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு மார்ச் மாதம் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்து அதற்காக தீவிரமாக செயல்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு ‘துணிவே துணை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கான இயக்குனர் ஹெச் வினோத் மற்றும் படக்குழுவினர் ஏற்கனவே தாய்லாந்துக்கு சென்றுவிட்டனர். அங்கு ஷூட்டிங் வேலைகளை தொடங்கிவிட்ட நிலையில் அஜித் இன்னும் ஒரு வாரத்தில் அங்கு சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு ஒருமாதத்துக்கு மேல் நடக்கும் ஷூட்டிங்கோடு மொத்தப் படமும் முடிய உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்