கோப்ரா கதை என்னுடையதில்லை.. நான் செய்த தவறு அதுதான் – இயக்குனர் அஜய் ஞானமுத்து புலம்பல்!

vinoth

புதன், 14 ஆகஸ்ட் 2024 (14:26 IST)
விக்ரம் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸான திரைப்படம்  ‘கோப்ரா’. இந்த படம் பெரும் பொருட்செலவில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் உருவாக்கத்தில் இருந்து 2022 ஆம் ஆண்டு வெளியாகி படுதோல்விப் படமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் கடுமையான கேலிகளும் படத்தின் மேல் எழுந்தன.

இதையடுத்து இந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தன்னுடைய முதல் படமான டிமாண்டி காலணி படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுத்து கம்பேக்குக்காக காத்திருக்கிறார். இந்த படம் நாளை ரிலீஸாகவுள்ள நிலையில் அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் கோப்ரா படம் தோல்வி அடைந்ததற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.

அதில் “கோப்ரா படத்தின் கதை என்னுடையது இல்லை. நான் எடுத்துச் சென்ற கதை வேறு. அது தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை. அவர் கொடுத்த இந்த கதை எனக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் எல்லோரும் நன்றாக இருப்பதாக சொன்னதால், நாம்தான் தவறாக கணிக்கிறோமோ என யோசித்து என் முடிவை மாற்றிக் கொண்டேன். அப்படிதான் கோப்ரா உருவானது. ஆனாலும் எனக்கு அந்த கதையில் முழு நம்பிக்கை வரவில்லை. அது நான் செய்த தவறுதான். நமக்கு 100 சதவீதம் நம்பிக்கை அளிக்காத ஒரு கதையைப் படமாக்கி இருக்கக் கூடாது என்பதை இப்போது உணர்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்