இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனருடன் மீண்டும் இணையும் கௌதம் கார்த்திக்

செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (10:23 IST)
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை எடுத்த கௌதம் கார்த்திக் மறும சந்தோஷ் பி ஜெயக்குமார் டீம் மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளது.


 
ஹரஹர மகாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவர் புதிதாக இயக்கும் படத்துக்கு, தனியொருவர் படத்தில் இடம் பெற்ற பாடலின் முதல் வரியான 'தீமை தான் வெல்லும்' என்ற வரி தலைப்பாக வைத்துள்ளனர்.
 
கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் "தீமை தான் வெல்லும்" படத்தை தயாரிக்கிறார். இதில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் மூலம் சந்தோஷ் பி ஜெயக்குமாருடன் மூன்றாவது முறையாக இணைகிறார்.    "தீமை தான் வெல்லும்" படம்  மர்மமாக நிகழ்ந்த கொலையை மையமாக வைத்து உருவாகும் ஆக்சன் திரில்லர் படமாகும். கோவாவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. டி இமான் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதர நடிகர் மற்றும் நடிகைககள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரத்தை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்