“தென்னிந்திய படங்களில் சில பார்முலாக்கள் உள்ளன…”- தமன்னா கூறிய காரணம்

புதன், 4 அக்டோபர் 2023 (12:41 IST)
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது சினிமாவில் 18 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வர ஆரம்பித்துள்ளன. பாலிவுட்டில் அடுத்தடுத்து ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகியவற்றில் நடித்துள்ளார். இந்த இரு படங்களிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் நடித்திருந்தார்.

இப்போது தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தாமல் பாலிவுட்டில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். இதுபற்றி பேசியுள்ள தமன்னா “தென்னிந்திய கமர்ஷியல் படங்களில் சில பார்முலாக்கள் உள்ளன. சில படங்களில் என்னுடைய கதாபாத்திரத்தோடு என்னால் முழுமையாக பொருந்த முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவே முடியாத அளவுக்கு ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் படங்களில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்