அல்-ஜசீரா தொலைக்காட்சி நடத்திய விவாதத்தில் கலந்துக் கொண்டு பேசிய பாஜக எம்.பி. தருண் விஜய், தென்னிந்தியர்களை குறிப்பிட்டு நாங்கள் கருப்பின மக்களோடு வாழ்கிறோம் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இவரது கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் தருண் விஜய் மன்னிப்பு கோரினார்.