மழையில் நனைந்தபடியே கச்சேரியில் ஆடி பாடிய ஆண்ட்ரியா!

செவ்வாய், 2 மே 2023 (13:11 IST)
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் இந்திய அளவில் ஹிட் ஆனது. கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள ஆண்ட்ரியா, இசைக் கச்சேரிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் கலந்துகொண்ட கச்சேரியில் மழை குறுக்கிடவே, அதையும் பொருட்படுத்தாது நனைந்தபடியே ஆடி பாடியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர, அது வைரல் ஆகி வருகிறது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்