உக்ரைன் குழந்தைகளை மீட்க நிதி திரட்டும் தமிழ் நடிகை!

செவ்வாய், 1 மார்ச் 2022 (17:40 IST)
உக்ரைன் நாட்டில் போரினால் அவதிப்படும் குழந்தைகளை மீட்க நிதி திரட்டுவதாக தமிழ் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் என்று தெரிவித்துள்ளார். 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் குழந்தைகள் பெண்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கடும் துயரத்தில் உள்ளனர்
 
இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் உள்ள குழந்தைகளின் நிலைமையை நினைத்து பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது என்றும் அந்த குழந்தைகளை பத்திரமாக மீட்பதற்காக நிதி திரட்டி வருவதாகவும் எனவே தாராளமாக நிதி வழங்கி உதவி செய்யுங்கள் என்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் நடிகை எமி ஜாக்சன் கூறியுள்ளார் 
 
பிரிட்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் தமிழில் ரஜினி விஜய் தனுஷ் விக்ரம் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்