களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த விமல், தொடர்ந்து கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து வந்தார். அதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வி அடைந்ததால் கடந்த சில வருடங்களாக அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலை உருவானது.
அதையொட்டி அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் சமூகவலைதளங்களில் தன்னை கேலக்ஸி ஸ்டார் என அழைப்பது பற்றி பேசியுள்ளார். அதில் “என்னை கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி ஓட்ரானுங்கன்னு நெனைக்குறேன். எனக்கு அந்த டைட்டில்ல விருப்பம் இல்ல. அப்படி டைட்டில் போடாலாமான்னு ஒரு படத்துலக் கூட கேட்டாங்க. என்னை ஓட்றதுக்காக அப்படி சொல்றாங்க. அதப் போயி போடணும்னு சொல்றீங்கன்னு சொல்லிட்டேன்” எனக் கூறியுள்ளார்.