மம்பட்டியான் பாடலைப் பயன்படுத்த அனுமதி கேக்கல… இப்ப நான்தான் அவங்களுக்கு காசு கொடுக்கணும்- தியாகராஜன் பதில்!

vinoth

வெள்ளி, 6 ஜூன் 2025 (11:21 IST)
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘குட்னைட்’ மற்றும் ‘லவ்வர்’ ஆகிய படங்களுக்கு அடுத்தப் படமாக ’டூரிஸ்ட் பேமிலி’ படம் கடந்த மே 1 ஆம் தேதி ரிலீஸானது. படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்க, சிம்ரன், யோகி பாபு மற்றும் சசிகுமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

இந்த படத்துக்கு ரிலீஸுக்கு முன்பே நல்ல எதிர்பார்ப்பு நிலவியது. படம் ரிலீஸாகி ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்த நிலையில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து கலக்கியது. திரையரங்கு மூலமாக மட்டும் சுமார் 75 கோடி ரூபாய் வசூலித்து இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஆனது.

இந்த படத்தில் மம்பட்டியான் படத்தில் இடம்பெற்ற ‘மலையூரு நாட்டாம’ என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்த காட்சிகள் வெகுவாக ரசிக்கும் படி அமைந்திருந்தன. இந்நிலையில் மம்பட்டியான் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தியாகராஜன் இதுபற்றி பேசும்போது “அந்த பாடலை பயன்படுத்த அவர்கள் என்னிடம் அனுமதி பெறவில்லை. பலரும் என்னிடம் ‘அவர்கள் மேல் வழக்குப் போடுங்க. காசு கேளுங்க’ என்றனர். ஆனால் அந்த பாடலை மீண்டும் ஹிட் ஆக்கியதற்கு நான்தான் அவர்களுக்கு காசு கொடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்