ராஜமௌலியின் பாகுபலி படத்தில் நாசர், சத்யராஜ் போன்ற தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். இதனை மனதில் வைத்து, பாகுபலியை நான் ஆதரிக்கப் போவதில்லை. ஆந்திராவில் சாய்குமார் போன்ற சிறந்த நடிகர்கள் இருக்கும்போது பிறமொழி நடிகர்களை நடிக்க வைத்ததை ஏற்க முடியாது என்ற தொனியில் சுரேஷ் ட்விட் செய்திருந்தார். சுரேஷின் இந்த பதிவுக்குப் பிறகுதான் பெரும்பாலான தமிழர்களுக்கு அவர் தமிழரல்ல தெலுங்கர் என்ற விவரமே தெரிய வந்தது.
எனக்கு நடிகர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி என்றெல்லாம் பிரிக்க தெரியாது. ஒரு இயக்குநராக என்னுடைய பாத்திரத்திற்கு யார் சரியாக இருப்பார் என்று பார்ப்பது எனது பணி, மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதற்காக எல்லாம் நான் கவலைப்பட முடியாது என கூறியுள்ளார்.