பத்மா ஷேசாத்ரி பள்ளி விவகாரம்… சித்தார்த் கருத்து என்ன?

சனி, 29 மே 2021 (08:27 IST)
பத்மா சேசாத்ரி பள்ளி பாலியல் தொல்லை சம்மந்தப்பட்ட விவகாரத்தில் நடிகர் சித்தார்த் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதலாகவே பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே கல்வி பயின்று வருகின்றனர். முன்னதாக கடந்த சில மாதங்கள் முன்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு கொரோனா பரவியதால் மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்புகளின் போது ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் அந்த பள்ளியின் மீது பழைய மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் என இப்போது அடுக்கடுக்காக புகார்களைக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் எந்த சமூகப் பிரச்சனைகள் நடந்தாலும், கருத்து தெரிவித்து வரும் நடிகர் சித்தார்த், இந்த விவகாரத்தில் மட்டும் எந்த கருத்தையும் சொல்லாமல் மூன்று நாட்களாக மௌனமாகவே இருந்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்