பெறோர் ஆகப்போகும் மகிழ்ச்சியில் ராம்சரண்- உபாசனா தம்பதிகள்!

சனி, 17 ஜூன் 2023 (15:50 IST)
நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவும் சினிமாவில் நடிக்க வந்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஆஸ்கர் வரை சென்றது. ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டுக் கூத்து பாடலுக்கு ஆஸ்கர் கிடைத்தது.

ராம்சரணுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அவர்களுக்கு குழந்தையில்லை. இது சம்மந்தமாக அடிக்கடி சமூகவலைதளங்களில் கருத்துகளை பேசிவந்தன்ர் அவரது ரசிகர்கள். இந்நிலையில் இப்போது உபாசனா கருத்தரித்துள்ளார்.

இது சம்மந்தமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள உபாசனா “எங்களுக்கு கல்யாணம் ஆன மூன்றாம் நாளே நான் கர்ப்பமாக வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர். எனது கேரியரை தேர்வு செய்வதில் எனக்கான சுதந்திரத்தை ராம்சரண் கொடுத்தார். அதனால் நாங்கள் தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்தினோம். இப்போது கர்ப்பமாக இருப்பதை அவரிடம் தெரிவித்ததும், அனைத்து சோதனைகளையும் செய்து உறுதியானபின்னரே அவர் அதைக் கொண்டாடினார்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்