நடிகர் கமல்ஹாசன் தடம் தெரியாமல் போய்விடுவார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

சனி, 19 டிசம்பர் 2020 (17:07 IST)
வரும் சட்டமன்றத் தேர்தலுடன் கமல்ஹாசன் காணாமல் போய்விடுவார் என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதற்கான பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.

அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே நிச்சயம் தனது கட்சி வெல்லும் என எதிர்ப்பார்ப்புடன் கமல் உள்ளார்.

நேற்று மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணிக்குப் பேசிவருவதாக வெளியான தகவலை கமல் மறுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில், நடிகர் கமல்ஹாசனின் நடவடிக்கையாளும் பேச்சாலும் தற்போது அவருக்கு இருக்கிற வாக்கு வங்கியும் சரிந்து, வரும் சட்டமன்றத் தேர்தலுடன் காணாமல் போய்விடுவார் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்