சௌந்தர்யா ரஜினிக்கு கை கொடுத்த தனுஷ் : பரபரப்பு தகவல்

திங்கள், 26 செப்டம்பர் 2016 (16:33 IST)
சூப்பர்ஸ்டாரின் ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா, சமீபத்தில் தனது கணவர் அஸ்வினுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை பிரிந்து வாழ்கிறார்.


 

 
இவர் ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தை இயக்கியிருந்தார். தற்போது அடுத்து ஒரு படம் இயக்குவதாக கூறப்பட்டது. 
 
அப்படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் தயாரிப்பு அனைத்தும் நடிகர் தனுஷ் என்று செய்தி வெளியாகியிருக்கிறது. படத்திற்கு ‘ நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்