மீண்டும் சல்மான் கான் பட ஷூட்டிங்கில் ஏ ஆர் முருகதாஸ்!

vinoth

புதன், 21 ஆகஸ்ட் 2024 (10:25 IST)
ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு இடையிலேயே முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கின்றனர். இதன் முதல் கட்ட ஷூட்டிங் கடந்த ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட ஷூட்டிங் தொடங்குகிறது. இதில் ஒரு பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும், அதற்காக 10000 டம்மி துப்பாக்கிகள் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்