பிரியாணி கடை காரர்கள் சேர்ந்து தயாரிக்கும் திரைப்படம் – பேரு என்ன தெரியுமா?

செவ்வாய், 22 டிசம்பர் 2020 (19:11 IST)
சென்னையில் இயங்கிவரும் பிரியாணி கடைக்காரர்கள் ஐந்து பேர் சேர்ந்து அம்மா உணவகம் என்ற பெயரில் படம் ஒன்றை தயாரிப்பதாக சொல்லப்படுகிறது.

சென்னையில் முன்னணி பிரியாணிக் கடைகாரர்களாக இயங்கும் 5 கடைகாரர்கள் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார்களாம். அந்த படத்தின் கதாநாயகியாக பிரியாணிக் கடைகாரர்களில் ஒருவரின் மகளே நடிக்க இருக்கிறார்களாம். மேலும் இந்த திரைப்படத்துக்கு அவர்கள் அம்மா உணவகம் என்ற பெயரை சூட்டியுள்ளார்களாம். இந்த படத்தின் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்