முன்பொரு காலத்தில் அஜீத்தின் ஆஸ்தான தயாரிப்பாளராக இருந்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி. இரண்டு வருடங்களுக்கு முன்பு சிம்பு, ஜெய், ஹன்சிகா, தீக்சா சேத் நடிப்பில் வேட்டை மன்னன் என்ற படத்தை ஆரம்பித்தார். படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் திடீரென்று அதே சிம்பு - ஹன்சிகா காம்பினேஷனில் சக்ரவர்த்தி தயாரிக்கும் வாலு படம் குறித்த விளம்பரங்கள் வெளியாயின. வேட்டை மன்னனை டீலில்விட்டு வாலு வளர ஆரம்பித்தது.
இந்தப் படத்தின் போதுதான் சிம்பு, ஹன்சிகா காதலிக்க ஆரம்பித்தனர். அந்த காவியக் காதல் படப்பிடிப்பு முடியும் முன்பே காவிய முறிவாக மாறியது. இப்போதையப் பிரச்சனை, படத்தின் சில பாடல் காட்சிகளை எடுக்க வேண்டும். ஆனால் ஹன்சிகா கால்ஷீட் தர மறுக்கிறார். மே, ஜூனுக்கு அப்புறம் பார்க்கலாம் என்கிறார். இந்த கால இடைவெளியில் சக்ரவர்த்தி வாங்கிய கடனுக்கான வட்டி குட்டி போட்டு அவரது பாங்க் பேலன்ஸை மட்டுமின்றி அவரின் பேலன்ஸையை காலாவதியாக்கிவிடும்.