நான்குப் படங்களில் நகுல்

சனி, 4 பிப்ரவரி 2012 (19:16 IST)
சன் பிக்சர்ஸின் புண்ணியத்தால் இரண்டு படங்கள் நன்றாகப் போனது. அது நமக்கு வந்த கூட்டம்தான் என்று தனியாக தவிலடித்தார் நகுல். அந்த மிதப்பில் கோடியில் சம்பளம் கேட்ட இவரை தலையில் தட்டி மூலையில் உட்கார வைத்தது தமிழ் சினிமா.

அந்த கொடுங்கனவிலிருந்து இப்போதுதான் மீண்டு வருகிறார். இன்று அவர் கையில் நான்கு படங்கள். இதில் வல்லினம் படத்தை ஈரம் அறிவழகன் இயக்கி வருகிறார். மற்ற மூன்று படங்களில் ஒன்றான அமளி துமளியில் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடிக்கிறார். மற்ற இரு படங்கள் சடுகுடு மற்றும் நான் ராஜாவாகிறேன்.

நான்கு படங்கள் இருப்பதால் நகுல் மீண்டும் முருங்கை மரம் ஏறிடக் கூடாது.

வெப்துனியாவைப் படிக்கவும்