தமிழைவிட தெலுங்கில்தான் நயன்தாராவுக்கு நடிக்க அதிக வாய்ப்புகள் வருகின்றன. பிரபுதேவாவுடன் காதலில் இருந்தவேளை ஸ்ரீராமராஜ்ஜியம் படத்துடன் நடிப்புக்கு முழுக்குப் போடுவதாக அவர் அறிவித்தார். அப்படத்தின் கடைசி நாளில் நயன்தாரா நடந்து வருகையில் அவர் மீது பூத்தூவி தெலுங்குப் படவுலகம் அவருக்கு ப்ரியாவிடை தந்தது.
தற்போது தமிழில் நண்பேன்டா, இது நம்ம ஆளு, ஜெயம் ரவியுடன் பெயரிடப்படாத படம் என மூன்று படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். தெலுங்கில் ஒன்றே ஒன்று, அனாமிகா. அதுவும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் வெங்கடேஷ், நாகார்ஜுனா மற்றும் ஜுனியர் என்டிஆர் என மூன்று ஹீரோக்களின் படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு அழைப்பு வந்துள்ளது. மூன்றில் இரண்டிலாவது நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவிப்பார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களின் கருத்து.