சூப்பர் ஸ்டாரை இயக்கும் புஷ்பா இயக்குனர்... அடுத்தடுத்து குவியும் வாய்ப்புகள்!

ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (09:36 IST)
இயக்குனர் சுகுமார் புஷ்பா வெற்றிக்குப் பின்னர் முன்னணி கதாநாயகர்கள் விரும்பும் இயக்குனராக உருவாகியுள்ளார்.

அல்லு அர்ஜுனை வைத்து அவர் இயக்கிய புஷ்பா திரைப்படம் இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடி மற்ற மொழிகளிலும் அவர் மீது கவனத்தைப் பாய்ச்சியுள்ளது. இந்நிலையில் புஷ்பா இரண்டாம் பாகத்துக்குப் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகர் தனுஷை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இரண்டு தெலுங்கு படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வரும் தனுஷுக்கு இது மூன்றாவது படமாக அமையவுள்ளது.

மேலும் ஒரு சில பாலிவுட் வாய்ப்புகளும் அவருக்கு வரத் தொடங்கியுள்ளது. விஜய் தேவாரகொண்டாவை வைத்து ஒரு படம் இயக்க ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் இப்போது சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்க ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் மற்ற படங்களை ஒத்திவைத்துவிட்டு முதலில் சிரஞ்சீவி படத்தை தொடங்க உள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்