இந்தப் படத்தை வெற்றிமாறனும், தனுஷும் சேர்ந்து தயாரித்திருந்தனர். வட சென்னையை சேர்ந்த சிறுவர்கள் நடித்திருந்தனர். பள்ளியில் படிக்கும் அந்த மாணவர்கள் படப்பிடிப்புக்கு டிமிக்கி கொடுத்து அவ்வப்போது ஓடிவிடுவதால் அவர்களை சென்னையிலுள்ள தனது அலுவலகத்தில் சுமார் ஒரு வருடம் தங்க வைத்தார் வெற்றிமாறன். பள்ளிக்கு அவரது அலுவலகத்திலிருந்து காரில் சென்று காரில் திரும்புவார்கள். பள்ளி இல்லாத நேரங்களில் படப்பிடிப்பு.