உறு‌தி எடு‌த்து‌க்கொ‌ண்ட ‌ஸ்ரேயா

செவ்வாய், 20 மே 2014 (17:52 IST)
தமிழ், தெலுங்கு, மலையாளம் என எத்தனையோ படங்கள் நடித்தாலும், தற்போது தெலுங்கு படத்தில் நாகார்ஜுனாவுடன் நடித்த மனம் என்கிற படத்தை என்னால் என்றைக்கும் மறக்கவே முடியாது என்கிறார் நடிகை ஸ்ரேயா. 
விவசாயி மனைவி கதாபாத்திரத்தில் நடித்து வரும் எனக்கு விவசாயிகளின் துயரங்களை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் மொத்த யூனிட்டும் கிளம்பி ஷூட்டிங் நடக்கும் கிராமங்களுக்கு சென்று விடுவோம். அப்படி பல்வேறு கிராமங்களுக்கு சென்று வந்தேன். 
 
உண்மையில் விவசாய தொழிலாளர்களின் உழைப்பு மிகவும் கடினமானதுடன், உழைப்புக்கு தகுந்த வருமானம் வருகிறதா என்றால் அதுவும் இல்லை. அதையெல்லாம் நேரில் பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன். அதனால் அவர்களின் உழைப்புக்கு மரியாதை தரும் விதமாக இனிமேல் உணவுப் பொருட்களை வீணாக்க மாட்டேன் என்று உறுதியும் எடுத்துக் கொண்டேன் என்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்