7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் மே.இ.தீவுகள்: இந்திய பவுலர்கள் அசத்தல்!

ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (15:29 IST)
7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் மே.இ.தீவுகள்: இந்திய பவுலர்கள் அசத்தல்!
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
 
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சற்றுமுன் வரை 25 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய பந்துவீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர், சாஹல் உள்பட அனைவரும் மிக அபாரமாக பந்து வீசியதை அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ரன்களை எடுக்க திணறி வருகின்றனர் என்பதும் சீரிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்