தொடர்ச்சியாக 7 போட்டிகளில் தோல்வி.. என்ன ஆச்சு திருச்சி அணிக்கு?

வியாழன், 6 ஜூலை 2023 (07:53 IST)
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில் நேற்று திருச்சி மற்றும் நெல்லை அணிகள் இடையே போட்டி நடைபெற்றது 
 
இந்த போட்டியில் ஏற்கனவே ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த திருச்சி அணி நேற்றைய போட்டியிலும் தோல்வி அடைந்ததால் அந்த அணி தொடர்ச்சியாக 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணியின் 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது 
 
இதனை அடுத்து நெல்லை அணி 16 ஓவரில் 130 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் நெல்லை அணி 11.5 ஓவர்களிலேயே 135 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது
 
இதனை அடுத்து திருச்சி அணி தொடர்ச்சியாக ஏழாவது போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்