வார இறுதி கட்டுப்பாடு: இன்று முதல் 3 நாட்களுக்கு கோவில்கள் மூடல்!

வெள்ளி, 21 ஜனவரி 2022 (07:30 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளி சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவில்கள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு கோவில்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன 
 
ஏற்கனவே பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக கோவில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை தான் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இரண்டே நாட்களில் மீண்டும் இன்று முதல் 3 நாட்களுக்கு கோவில்கள் உள்பட வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டு உள்ளதால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்