தனக்கு தானே முடிவெட்டிக்கொண்ட சச்சின் !! வைரலாகும் புகைப்படம்

திங்கள், 20 ஏப்ரல் 2020 (19:44 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தனக்கு தானே முடி வெட்டிக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவரும் நிலையில், இந்தியாவில் முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதனால் அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன.

இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், தனது முடியை தானே வெட்டிக் கொண்டார். இதுகுறித்து புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்