தோனி தலைமையில் துபாய்க்கு புறப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்!

வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (16:42 IST)
எஞ்சிய ஐபில் போட்டிகளில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இன்று துபாய்க்கு சென்றுள்ளனர்.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த ஐபிஎல் 2021 சீசன் கொரொனா இரண்டாம் அலையின் காரணமாக ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நெருங்க உள்ள நிலையில் பயிற்சிக்காக சென்னை வந்த சி எஸ் கே வீரர்கள் சென்னையில் விளம்பர படங்களில் நடித்தனர். அதன் பின்னர் இன்று துபாய்க்கு தனி விமானத்தில் சென்றுள்ளனர். அங்கு கொரோனா தனிமைப்படுத்தலுக்குப் பிறகு அவர்கள் பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்