டாஸ் வென்ற இலங்கை எடுத்த அதிரடி முடிவு!

திங்கள், 1 நவம்பர் 2021 (19:14 IST)
டாஸ் வென்ற இலங்கை எடுத்த அதிரடி முடிவு!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இருபத்தி ஒன்பதாவது போட்டி நடைபெறுகிறது என்பதும் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இங்கிலாந்து அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் உள்ள ஏ பிரிவில் இங்கிலாந்து அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இலங்கை அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் 2 தோல்வி என இரண்டு புள்ளிகளை மட்டும் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்